ஏதோ தொலைந்து போன
உணர்வு நெஞ்சுக்குள்ளே
கதவை திறக்கிறேன்
இங்கும் அங்குமாய்
மனித நடமாட்டம்
தொலைந்து போனதை
அவர்களில் தேடுகிறேன்
கதவடைத்துவிட்டு
அறைக்குள் வருகிறேன்
கண்ணாடியை பார்க்கிறேன்
என் முகம் மட்டும்
என்னோடிருந்த முகங்கள்
நினைவில் வர
பின்புதான் தெரிகிறது
தொலைத்தவன் அல்ல நான்
உங்களிடமிருந்து
தொலைந்து போனவன் நான்....
படித்ததில் சிலவற்றை திரும்பி படிக்க தோன்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள தோன்றும் இந்த இரண்டும் நிறைவேற இங்கே இணைகிறேன் உங்களுடன்.
Monday, January 25, 2016
தொலைத்தது யார்
Monday, January 11, 2016
இல்லாதிருத்தல்
சமையிட்ட கண்கள் - தங்கத்தில் கொம்புகள்
இனம் வியக்கும் வேகம் - முதுகில் நாகம்
இப்படி ஒரு எருமைதான் கடவுள்
எருமைகள் நினைக்கலாம்
ஆறடி நீளம்
அழகான பொந்து
அரிசிகளால் அரியனை
ராட்சஸ விரல் - அதில்
செறுப்புகள் அறுக்கும் சக்கரம்
இப்படி ஓர் எறும்புதான் எம்பெருமான்
எறும்புகள் நினைக்கலாம்
ஓளி வீசும் ஆயிரம் வண்ணங்களில்
உடலும் சிறகுகளும்
எட்டு நாட்களுக்கொருமுறை உயிர்த்தெழுதல்
அந்தரத்தில் சுழலும் விஸ்பரூப மலரில் வீற்றிருப்பு
இப்படி ஓரு பட்டாம்பூச்சிதான் பரம்பொருள்
பட்டாம்பூச்சிகள் நம்பலாம்
சிறகுகள் முளைத்த ஓடு
மகுடம் சூட்டிய மொட்டைதலை
நாளொன்றிற்கு 24 முறை எட்டுவைத்து
காலத்தை நிர்ணயித்தல்
இப்படி ஓர் ஆமைதான் ஆண்டவன்
ஆமைகள் தீர்மானித்திருக்காலம்
கனிகளே இலைகளாய் ராஐ மரம்
பூக்கள் பதித்து மேகத்தாலான வெள்ளைக் கூடு
கழுத்தில் வடைமாலையோடு
அபயக்கரம் காட்டி திருச்சிற்றம்பலம்
இப்படி ஒரு காக்கைதான் காக்கும் தெய்வம்
காக்கைகள் வாதாடலாம்
எந்தவோர் இனத்தின் கற்பனா சக்தியும்
கடவுளை பூமியில் அனுமதிப்பதில்லை.
------கபிலன் வைரமுத்துவின் படைப்பு குங்குமம் இதழில்.....