பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
ஔவையார் அன்றே எழுதிய அற்புதமான நல்வழி.
இன்றும் உணரா ஜென்மங்கள்
உணர்ந்தால் நன்று.
படித்ததில் சிலவற்றை திரும்பி படிக்க தோன்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள தோன்றும் இந்த இரண்டும் நிறைவேற இங்கே இணைகிறேன் உங்களுடன்.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
ஔவையார் அன்றே எழுதிய அற்புதமான நல்வழி.
இன்றும் உணரா ஜென்மங்கள்
உணர்ந்தால் நன்று.
திரைப்படம் பேசினால்
அரசியல் தெரியாதோ என்பீர்!
அரசியல் பேசினால்
ஆறடி தள்ளி நிற்பீர்!
மொழிப்பற்று கொண்டால்
ஆங்கிலம் புரியாதோ என்பீர்!
ஆங்கிலம் பேசினால்
படித்த திமிர் என்பீர்!
பகுத்தறிவு பேசினால்
கடவுள் பிடிக்காதா என்பீர்!
கடவுள் நம்பிக்கை கொண்டால்
கர்னாடகம் என்பீர்!
சகோதரத்துவம் சொன்னால்
நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!
ஜனநாயகம் பேசினால் நாட்டின்
இறையாண்மைக்கு எதிரானது என்பீர்!
காதல் பிடிக்காதென்றால்
ஆண்மையில் ஐயம் கொள்வீர்!
காமம் பற்றி பேசினால்
காதுகளைப் பொத்திக்கொள்வீர்!
மெய்ஞ்ஞானம் பேசினால்
விஞ்ஞானம் அறியீரோ என்பீர்!
விஞ்ஞானம் பேசினால்
விலகித் தள்ளி நிற்பீர்!
ஓடி ஓடி உழைத்தாலும்
பணத்தாசை பிடித்தவன்!
பொருள் வேண்டாமென்றாலும்
பிழைக்கத் தெரியாதவான்!
எதிர்த்துப் பேசினால்
அதிகப்பிரசங்கி!
பேசாமலிருந்தால்
கல்லுளிமங்கன்!
எத்தனை கடினம் இவ்வுலகில்
நான் நானாய் வாழ்வதில்.....!!!!
- பத்ம ஸ்ரீ கமலஹாசன்
என் கண்களை
உன் துப்பட்டாவில் கட்டி
காதல் சிறையில் அடைத்தாயே
இந்த கைதியை
பார்க்க வருவாயென்று
இரத்தம் தெறிக்க காத்திருந்தேன்
- வாட்ஸ் அப் இல் வாசித்தவை
காதல் என்பது குழந்தையின் கையில் உள்ள முட்டை போன்றது எப்பது உடையும் என யாராலும்
சொல்ல முடியாது.
படித்ததில் பிடித்தது.