Tuesday, December 27, 2016

பாடுபட்டுத் தேடி

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்      

ஔவையார் அன்றே எழுதிய அற்புதமான நல்வழி.
இன்றும் உணரா ஜென்மங்கள்
உணர்ந்தால் நன்று.

Monday, December 26, 2016

கவிதைக்காரர்கள் வீதி..

கடற்கரைக் காற்றாய்
உன் வீட்டை
நான் சூழ்ந்து நிற்கின்றேன்.
நீ
கொஞ்சம்
ஜன்னலை திற.
நீ
என் பெயரைச் சொல்லிக்
கூப்பிடுகிறாய்
உன் மகன்
ஓடி வருகிறான்
நான்
உன் பெயரைச் சொல்லிக்
கூப்பிடுகிறேன்.
என் மகள்
ஓடி வருகிறாள்.
சேராத காதலெல்லாம்
இப்படித்தான்
பிள்ளைகளாக
வந்து பிறக்கின்றன.
வாசல் கோலமாய்
பரந்து கிடக்கிறது
உன் அழகு
அதன் நடுவில்
பரங்கி பூவாய்ச்
சாய்ந்து கிடக்கிறது
என் மனசு.
பிறகு
தருவதாக சொன்ன
நிறைய முத்தங்கள்
என்னிடம் இருக்கின்றன
"பரவாயில்லை
பிறகு தா " என்று சொன்ன
நிறைய வார்த்தைகள்
உன்னிடம் இருக்கின்றன
பிறகுக்கு பதிலாய்
உடனே என்ற வார்த்தை
வாய்த்தாலொழிய
வசப்பட வாய்ப்பில்லை
முத்தங்கள்.
த.கண்ணன்
(குங்குமம் இதழில்)
google-site-verification: google0a474e8066697960.html

Thursday, December 15, 2016

நாமும் கடவுள்

குழந்தை பேசும்
பாஷை மட்டும்
புரிந்துவிட்டால்
நாமும்
கடவுளாகி விடுவோம்

Monday, December 12, 2016

நான் நானாய் வாழ்வதில்.....!!!!

திரைப்படம் பேசினால்
அரசியல் தெரியாதோ என்பீர்!

அரசியல் பேசினால்
ஆறடி தள்ளி நிற்பீர்!

மொழிப்பற்று கொண்டால்
ஆங்கிலம் புரியாதோ என்பீர்!

ஆங்கிலம் பேசினால்
படித்த திமிர் என்பீர்!

பகுத்தறிவு பேசினால்
கடவுள் பிடிக்காதா என்பீர்!

கடவுள் நம்பிக்கை கொண்டால்
கர்னாடகம் என்பீர்!

சகோதரத்துவம் சொன்னால்
நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!

ஜனநாயகம் பேசினால் நாட்டின்
இறையாண்மைக்கு எதிரானது என்பீர்!

காதல் பிடிக்காதென்றால்
ஆண்மையில் ஐயம் கொள்வீர்!

காமம் பற்றி பேசினால்
காதுகளைப் பொத்திக்கொள்வீர்!

மெய்ஞ்ஞானம் பேசினால்
விஞ்ஞானம் அறியீரோ என்பீர்!

விஞ்ஞானம் பேசினால்
விலகித் தள்ளி நிற்பீர்!

ஓடி ஓடி உழைத்தாலும்
பணத்தாசை பிடித்தவன்!

பொருள் வேண்டாமென்றாலும்
பிழைக்கத் தெரியாதவான்!

எதிர்த்துப் பேசினால்
அதிகப்பிரசங்கி!

பேசாமலிருந்தால்
கல்லுளிமங்கன்!

எத்தனை கடினம் இவ்வுலகில்
நான் நானாய் வாழ்வதில்.....!!!!

-  பத்ம ஸ்ரீ கமலஹாசன்

Sunday, December 11, 2016

தீப ஓளி

மனதின் இ்ருளை
நல்லெண்ணம் எனும்
தீபத்தை ஏற்றி
அகற்றிடுங்கள் இன்று.

Friday, December 9, 2016

இரவு நேரத்து தேவதைகள்

ஆதவன் தீண்டலில்
இமை திறந்தது
எங்கே சென்றிருப்பாள்??
அவள் அங்கு இல்லை
இரவு முழுவதும் இருந்தாளே
எங்கே சென்றிருப்பாள்??
வினாக்களுக்கான விடையும்
அவளிடமே இருந்தது
மடியினில் தூங்க வைப்பவள்
விடிந்தாள் ஏங்க வைக்கிறாள்...

இன்றும் இரவில்
வரக்கூடும்
விடிந்து விட்டாள்
விடை பெறக்கூடும்
இன்று எப்படியாவது
இருக்க வைத்திடனும்
கங்கணம் எனக்குள்

கருமை நிறமென்றாலும்
அமைதியின் உருவமானவள்
மனதின் இறுக்கங்கள்
அவள் பிரவேசித்தால்
இல்லாமல் போகின்றன..

அவள் இருந்தால்
நான் என்கிற அகந்தை
இல்லாமல் போகிறது.

அவள் செல்லுமிடம்
அறிந்திருந்தால்
விடிந்ததும் சென்றிருப்பேன்
அவளை தேடி
அறியாதால் 
அவளுக்காக காத்திருந்தேன்

இரவு வந்தது
அவள் வருவதற்கான 
அடையாளம்
ஆங்காங்கே தென்பட
மின்விளக்குகளுக்கு
ஓய்வு அளித்தேன்

படுக்கையறை விளக்கிற்கும் 
ஒய்வு அளிக்க
ஒளிந்து கிடந்தவளாய்
நொடியில் தாவிக் கொண்டாள்

பேச முயன்ற என்னை
பேச விடாமல்
கண்களை மூடச்செய்தாள்
கண்களை வருடியபடியே
என் மேல் படர்ந்தாள்

உன் பெயரென்ன?
வினவினேன் .
இருள் என பதில் !
பகலில் எங்கு செல்வாய்?
மீண்டும் வினவினேன்.
இங்குதான் இருக்கிறேன்..
பதிலில் அதிர்ந்தேன்.

காண முடிவதில்லையே?
வினாக்களை தொடர்ந்தேன்
விடிந்ததும் வெளிச்சத்தை 
பூசிக் கொள்கிறேன்...
நீ காண முடிவதில்லை..

இப்படியே இருந்துவிட
முடியாதா...???
சலனமின்றி உச்சரித்தன
என் உதடுகள்.

பேசத் தொடங்கினாள்
உன் கண்களில் இருந்து
மறைந்து சென்றால்தான்
நீயென்னை தேடுகிறாய்!
எனக்காக எங்குகிறாய்!
இரவுக்காக காத்திருக்கிறாய்!!!
நானும் உன்னோடு
இருந்துவிட்டால்....
இதையெல்லாம் இழந்திடுவேன்!
நானும் நீயும் 
உறங்கி கொண்டிருந்தால்
உன் லட்சியங்களும்
உன்னோடு உறங்கிவிடும்
வெளிச்சத்தையும் கொஞ்சம்
நேசித்து பார்!
நான் இருப்பதை உணர்வாய்.

விடியல் தொடங்கியது
இமைக்காமல் அவளை பார்தேன்
ஒளியை பூசிக்கொண்டு
விழியிலிருந்து மறைந்தாள்

முதன்முதலாய் 
இருளை மறைத்த
வெளிச்சத்தை நேசித்தேன்
இருளாயி தெரிந்தாள்
வெளிச்சத்தில்!
- பாலமுருகன் 

நண்பர்களே உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.... நன்றி!


காதல் சிறை

என் கண்களை
உன் துப்பட்டாவில் கட்டி
காதல் சிறையில் அடைத்தாயே

இந்த கைதியை
பார்க்க வருவாயென்று
இரத்தம் தெறிக்க காத்திருந்தேன்

- வாட்ஸ் அப் இல் வாசித்தவை



குழந்தையின் கையில் முட்டை

காதல் என்பது குழந்தையின் கையில் உள்ள முட்டை போன்றது எப்பது உடையும் என யாராலும்
சொல்ல முடியாது.

படித்ததில் பிடித்தது.

Wednesday, December 7, 2016

சமாதான சண்டை

சமாதான கேடயத்தை
கையில் வைத்து கொண்டே
கத்திசண்டை போடுகிறேன்
மனைவியுடன்.

கத்திசண்டை தெரியாத
என் மனைவி
குத்திகாமிக்கும் சண்டையில்
என்னை ஜெயித்துவிடுகிறாள்.

முதலில் கிழிபடுவது
சண்டை தொடங்கியதும்
நான் காண்பிக்கும்
சமாதான கொடி.

மன்னிப்பு அவளின்
சண்டையிடல் அகராதியில்
இல்லாத வார்த்தை.

நீதிபதியாக என் மகள்
சண்டைக்கு இடையில்
சத்தமிட்டு அழுவதே அவளின்
ஆர்டர்! ஆர்டர்!

கைமீறி போகையில்
கைமாறிட
மறைத்து வைத்திருக்கும்
புடவைகளே
சமாதான புறாக்கள்.

அவையும் தோற்றால்
கொஞ்சம் உரசிட
கிரெடிட் கார்டடை சேதாரமின்றி
செய்கூலி சேதாரத்தோடு
மனைவியின் கழுத்தில்
ஆபரணமாக
முடிவுக்கு வரும்
சமதான சண்டை.

- பால முருகன்

உங்கள் கருத்துகளை commentல் பதிவு செய்யவும்.

Tuesday, December 6, 2016

கேபிள் டீவி இல்லாத ஊர்

சில பல வகையாக
இப்படி இருக்கும்
கேபிள் டிவி இல்லாத
ஊர் என்பது
காற்றில்
மெல்லினம் மட்டுமே
பரவி வரும்
பேசப்படுவது
நல்லினம் மட்டுமே
இருக்கும்
தருதலும் பெறுதலும்
முத்தமாக
மட்டுமே இருக்கும்
பகிரப்படுவதாகக்
கவிதைகள் இருக்கும்
கரையான் புற்று
நம்மீது
கூடு வைக்காமல் இருக்கும்
வருகின்ற விருந்தினர்
சாத்தானின் அண்ணாக
இல்லாமல் இருக்கும்
கண்ணோடு கண் நோக்குதல்
விளம்பர இடைவேளையில்
மட்டுமில்லாமல் இருக்கும்
குழந்தைகள்
பார்த்தீனியம்
ஆகாமல் இருக்கும்
உணர்ச்சி உணர்ச்சியாகவே
இருக்கும்
வஞ்சத்தின் நிழல்
இல்லாமால் இருக்கும்.
புணர்ச்சி
புணர்ச்சியாக இருக்கும்
கள்ளத்தின் வலை
இல்லாமல் இருக்கும்
நாமாகவே இருக்கும் வாழ்க்கை
வாய்ப்பதாக இருக்கும்
தொடர் போதையில்
தள்ளாடாத
ஊராகவே இருக்கும்
ஆனால்
நமக்குத்தான் பிடிப்பதில்லையே
ஊராக இருக்கும் ஊரும்
புணர்ச்சியாக இருக்கும் புணர்ச்சியும்
- ஆண்டாள் பிரியதர்சினி, கல்கி இதழில்.
படித்ததும்  பிடித்தது
பகிர்ந்திட துடித்தது
உனக்கும் பிடித்திருந்தால்
உள்(ள)த்தை பகிர்ந்து செல்
இப்பக்கத்தில்...

Monday, December 5, 2016

படித்தால் பிடிக்கும்

படிக்க எனக்கு பிடிக்குமென்பதால்
பிடித்ததை படிக்கும் வழக்கம் எனக்கு இல்லை.படித்ததில் சிலவற்றையாவது பகிர்ந்து கொள்ள எண்ணி பிடித்தது என அடையாள படுத்த நேர்கிறது. ஒவ்வொரு முறை புதிதாக ஒன்றை படிக்கும் போதும் ஒரு குழந்தையை போல 'அ' வில் தொடங்கி  ஔ வில் முடிக்கும் ஆசையுடன் படிக்கிறேன். அதிலும் தமிழில் படிக்கும் தாகம் தணிவதே இல்லை. நாள் தோறும் ஒரு புத்தகமாவது படித்தால் நாம் இளமையாக  உணர்வது என்பது உறுதி. எந்த ஒரு புத்தகமும் ஏதோ ஒரு பக்கத்தில் ஒளிந்திருக்கும் என்னை வெளி கொணர்வதாய் உள்ளது. இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.புத்தகத்தின் வாசனையோடு வாழ வேண்டும்.

Offers at Amazon on Accessories