ஏதோ தொலைந்து போன
உணர்வு நெஞ்சுக்குள்ளே
கதவை திறக்கிறேன்
இங்கும் அங்குமாய்
மனித நடமாட்டம்
தொலைந்து போனதை
அவர்களில் தேடுகிறேன்
கதவடைத்துவிட்டு
அறைக்குள் வருகிறேன்
கண்ணாடியை பார்க்கிறேன்
என் முகம் மட்டும்
என்னோடிருந்த முகங்கள்
நினைவில் வர
பின்புதான் தெரிகிறது
தொலைத்தவன் அல்ல நான்
உங்களிடமிருந்து
தொலைந்து போனவன் நான்....
படித்ததில் சிலவற்றை திரும்பி படிக்க தோன்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள தோன்றும் இந்த இரண்டும் நிறைவேற இங்கே இணைகிறேன் உங்களுடன்.
Monday, January 25, 2016
தொலைத்தது யார்
Subscribe to:
Post Comments (Atom)
நன்று
ReplyDelete