Monday, January 25, 2016

தொலைத்தது யார்

ஏதோ தொலைந்து போன
உணர்வு நெஞ்சுக்குள்ளே
கதவை திறக்கிறேன்
இங்கும் அங்குமாய்
மனித நடமாட்டம்
தொலைந்து போனதை
அவர்களில் தேடுகிறேன்
கதவடைத்துவிட்டு
அறைக்குள் வருகிறேன்
கண்ணாடியை பார்க்கிறேன்
என் முகம் மட்டும்
என்னோடிருந்த முகங்கள்
நினைவில் வர
பின்புதான் தெரிகிறது
தொலைத்தவன் அல்ல நான்
உங்களிடமிருந்து
தொலைந்து போனவன் நான்....

1 comment: