காதலில் விழுந்தேன் காயமுற்றேன்
மீண்டு வந்தேன்
மீண்டும் விழுந்தேன் கவலையுற்றேன்.
தோல்வி இங்கு மாறவில்லை
தோற்கடிப்பவர்கள் மாறினார்கள்
தோல்வி தந்த காதலிகளே
சிறிதும் சினமில்லை உங்களோடு
காதலை சொல்ல எனக்குரிமையெனில்
காதலை மறுக்கும் உரிமையுனக்கு
காதல் இருவருக்கும் பொது
ஒருதலை காதலை இருதலையாக்க
புரிதலில்லாத காதலோடு
மறுதலையை காவுகேட்கும் காதலா!
இதற்க்கு பெயர்தான் காதலா!!!
காதலை புரிந்துகொள்
காதலியை காதலிக்குமுன்
காதலை காதல் செய்
காதல் தோற்கடிப்பதில்லை....
-பால முருகன்
No comments:
Post a Comment