வாட்ஸ் ஆப்பில் வந்தது
உன் ஸ்மைலி
என் மனமெங்கும்
மழை பெய்ய தொடங்கியது.
ஸ்மைலிக்கு பின்னாலிருக்கும்
புன்னகை பூத்த உதடு
மஞ்சள் சாயம் பூசி
மனதில் நிழலாடியது.
பதிலுக்கு நானுமொரு
ஸ்மைலி போட்டு வைத்தேன்
முகத்தில் இறுக்கத்துடன்
கட்டைவிரல் உயர்த்தி
பதிலை நீ பதிவிட
இறுக்கம் தளர்ந்து
நானும் ஸ்மைலி ஆனேன்
வார்த்தைகளற்ற ஸ்மைலியிலே
வாழ்க்கை நகர்த்தாமல்
வாய்ஸ் குறுந்தகவலை
தட்டிவிட்டேன் ......
பதிலில்லை...
சிலநொடி வெறித்து பார்த்தேன்
கைப்பேசி மௌனத்தில்
....
உங்க வாய்ஸ் நல்லாருக்கு
குறுந்தகவல் கண்ணடிக்க
முத்தமிட்டேன் கைப்பேசிக்கு
- பாலா.....
No comments:
Post a Comment