Wednesday, October 9, 2019

கல்யாணத்திற்கு பிறகு

காதலிக்கும் போது
காதில் தேனாய்
ஒலித்த என் குரல்
கசந்தது ஏனோ உனக்கு
கல்யாணத்திற்கு பிறகு
வேப்பங்காயாய்......

என் உலகமே நீதான்
உறவுகளை தூக்கி எறிந்து
உன்னை நம்பி வருவேன்
 உரைத்த நீயோ இன்று
உன் குடும்பத்தை
நான் மதிக்கவில்லை என்று
போவதும் ஏனோ
என்னை தூக்கி எறிந்து

எல்லாமே மாறிவிட்டது
எதற்க்காக முன்பு சிரித்தாயோ
அதற்காக அழுகிறாய் இன்று

பேசுவது எல்லாம்
பிரச்சனையில் முடிகிறது

காதலர்களாகவே இருந்திருக்கலாமோ
கடைசி வரை
கல்யாணம் எனும் மாற்றத்திற்கு
ஆசைப்பட்டு
மாறிபோனது நாம்தான்



No comments:

Post a Comment