எனது மகளுக்கான எனது கவிதை
நீயொரு கவிதை புத்தகம்
உன்னை வாசித்து முடிக்க
ஒரு கோடி ஜென்மம் வேண்டும்!
எந்த வரியிலிருந்து தொடங்கினாலும்
உற்சாகமாய் படிக்கலாம்!
அள்ள அள்ள குறையாத
அமுதசுரபி நீ !
எழுத்து பிழையொன்றும்
உன்னில் தென்படவில்லை!
உன்னை படிப்பதற்கென்று
என்ன தவம் செய்தேனோ!
உன்னை படித்த பிறகாவாது
எந்தன் பேனா முனை
ஒரு கவிதை எழுதட்டும்.!
--- -- ---- --- பால முருகன் ----

Good one
ReplyDelete