Wednesday, September 21, 2016

நீயொரு கவிதை புத்தகம்

எனது மகளுக்கான எனது கவிதை

நீயொரு கவிதை புத்தகம்











உன்னை வாசித்து முடிக்க
ஒரு கோடி ஜென்மம் வேண்டும்!
எந்த வரியிலிருந்து தொடங்கினாலும்
உற்சாகமாய் படிக்கலாம்!
அள்ள அள்ள குறையாத
அமுதசுரபி நீ !
எழுத்து பிழையொன்றும்
உன்னில் தென்படவில்லை!
உன்னை படிப்பதற்கென்று
என்ன தவம் செய்தேனோ!
உன்னை படித்த பிறகாவாது
எந்தன் பேனா முனை
ஒரு கவிதை எழுதட்டும்.!

 --- -- ---- --- பால முருகன் ----

1 comment: