உன்னுடன் பேசாமலிருக்கும் போது
உன்னை பற்றியே பேசுகிறேன்
நீயில்லாத பயணத்தில்...
உன் நினைவுகள் பயணிக்கிறது
உன்னை கோபித்து கொண்டதற்காக
என்னை கோபித்து கொள்கிறேன்.
தூரமாய் செல்ல செல்ல
உனது அருகாமையை விரும்புகிறேன்.
காத்திருகிறேன் நான்
உன் மடியில் தலைசாய்க்கும்
தினத்திற்காக தினம்தினம்.
- பால முருகன்
No comments:
Post a Comment