தொலைந்து போன காதலனை
தேடுகிறேன் கணவனிடம்
காதலியை தொலைத்து என்னில்
மனைவியை தேடும் அவன்
மன்னிக்க வேண்டும்
அவரென்று அழைக்க உத்தரவு.
முதல் ரசிகையாம்
உன் கவிதைகளுக்கு
காதலிக்கும் போது
இன்றோ முகவரியாம்
உன் கவலைகளுக்கு
கல்யாணத்திற்கு பிறகு
எப்படி சிந்திக்கலானாய் நீ !!!
உன் அம்மாவிற்க்கு மருமகளானேன்
உன் மகளிற்க்கு அம்மாவானேன்
உனக்கு மட்டும் மனைவியானலும்
காதலியாய் தொடர விழைகின்றேனே
உனக்கு புரிகிறதா??
காதலுக்கு இருவரும் பொது
கல்யாணத்திறக்கு பிறகு
கணவன் மட்டும் உயர்வெனும்
அடிமை விலங்கு உடைக்கும்
முற்போக்கு காதலனாய் வருவாயா...
கணவெனும் முகமூடியிட்டிருக்கும்
காதலனே மீண்டு வா
மனைவியெனும் மாயவலையிலிருந்து
காதலியை மீட்டு போ....
------பால முருகன் !!!!!!
No comments:
Post a Comment