Friday, December 18, 2015

பரணில் கிடக்கிறது

பழைய கவிதை நோட்டு 
கண்ணில் பட்டது 
பரணில் சுத்தம் செய்கையில் 

பள்ளி பருவ கிறுக்கல்
திறந்து பார்க்கையில் 
சிரிப்பு வந்தது.

அந்த நோட்டினுள்ளே
காதல் தித்திக்கிறது
சமுதாய சாடல்கள் 
நட்பின் பெருமைகள் 
பெண்ணின் கண்ணீர் 
உழைப்பின் உயர்வுகள் 
அரசியல் அவலங்கள் 

மூடி வைத்தேன் 
கண்ணை மூடி யோசித்தேன் 

அன்றும் இன்றும்
கால ஓட்டத்தின் மாற்றம்

இப்பொழுது நோட்டினுள்ளே
காதல் கசக்கிறது 
சமுதாயத்தில் சாமானியனாய் 
நட்பு வலைதளத்தில் 
உழைப்பில் வெறுப்பு 
அரசியலா ஒதுங்கு 

எல்லோரிடமும் 
எதாவது ஒன்று பரணில் 

ஐயோ நேரமாச்சு 
எனக்கு வேலை இருக்கிறது 
உள்ளுணர்வு அழைக்க 
நோட்டை பரணிலே விட்டு 
சுத்தம் செய்ய தொடங்கினேன்.

- பால முருகன்





No comments:

Post a Comment